...

21 views

பூக்கள் பூக்கும் தருணம்...
மையிருளை
வாரியிறைத்து
கொண்ட
அர்த்தசாமங்களின்
நடுவினில்
மெல்ல தாழ் திறக்க
எத்தனிக்கும் மொட்டுக்கும்
வண்டுக்குமான
யுத்தங்களின் முடிவினில்
படர்ந்துகிடக்கும்
கூந்தல் காடுகளில்
பூத்துக்கிடக்கின்றன
இந்த மலர்கள்...

மலரிதழ் விரியும்
ஓசையை கேட்டவரில்லையாம்...
சற்றே கண்மூடுகையில்
மஞ்சத்தின் மூலையில்
தன்னிலை மறந்து
மெல்லிசையில்
பாடிக்கொண்டிருக்கும்
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எனும் ஸ்வர்ணலதாவின்
குரலின் இடையில்
வந்து போகும்
ரீங்காரங்களைத்தான்
இசைத்துப் போகிறது...!

© நித்திலன்...🎭