...

5 views

பார்க்கும் பார்வையில்!
பிள்ளை இல்லை என்று
தெய்வத்திடம் புலம்பி நிற்கையில்....
தாயவள்(போல் ) புலம்பியவளின்
கைகளை இறுக்கி பிடித்தாவாறு
விழிகள் மூடி தலையசைத்து
பார்க்கும் பார்வையில்
பாரம் பறந்திட கற்றது !

காதுக்கு கதிர்அளவுக்கு
தங்கம் வாங்க சேத்தகாசு
கடன் கொடுக்கையில்
தந்தையவன் கரம்பிடித்து
இமைகள்அழாகா அசைத்து
கட்டியனைத்து மகள்
பார்க்கும் பார்வையில்
சிந்தாமல் செலவானது கண்ணீர்!

தீராதநோய் என்று
ஊர் சொல்ல கேட்டு
அவசரசிகிச்சை அறையின்முன் பதறியவனிடம் ....
தோளைத்தட்டி தட்டிக்கொடுத்து
அப்பாவின் சகதோழர்
பார்க்கும் பார்வையில்
பதற்றம் சற்று பதறி தொலைந்தது !

காயங்கள் கரைந்திட
நம்பிக்கை துளிர்த்திட
புன்னகை செலவிட
பொருள் ஏதும் வேண்டாம்
பொருள் கொண்டு
பார்க்கும் பார்வை போதும் !
🦋🦋🦋🦋🖋️🖋️
#nuradhaag
#tamilquotes #WritcoQuote
© Nuradhaag