...

14 views

பிரிவு

நீ விட்டுச்சென்ற
நினைவுகளை
சுமந்து வாழ்கிறேன்....

அவ்வப்போது
அசைபோடுகிறேன்...

இனிக்க இனிக்க
இனிய நினவுகளை
தந்த நீ ஏன் விளக்கம்
எதுவும் கூறாமல்
விலகிச்சென்றாய்…

காரணம் இல்லாமல்
தவிர்த்து இருக்கமாட்டாய்
எனினும் குழம்பித்
தவிக்கிறது மனது…..

காரணம் எதுவாயினும்
காதலை சொல்ல இருந்த
திடம் பிரிவின்
காரணம் சொல்ல
இல்லாமல் போனது
ஏனோ….