...

2 views

எண்ணிய முடிதல் வேண்டும்
அன்னையைத்  தொழுதிட வேண்டும்
அன்பில் ஆத்மார்த்தம் வேண்டும்
ஆசானை மதித்திட வேண்டும்
ஆர்வத்துடன் படித்திட வேண்டும்
இயற்கையுடன் இசைந்திட வேண்டும்
இன்சொல் பேசிட வேண்டும்
ஈகையுடன் ஈதல் வேண்டும்
ஈடுபாடுடன் கற்றிட வேண்டும்
உழைப்பில் உத்வேகம் வேண்டும்
உயர்வில் உண்மை வேண்டும்
ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்
ஊருக்கும் உழைக்க வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும்
எண்ணம் எழிலாக வேண்டும்
ஐந்தில் வளைய வேண்டும்
ஐம்புலனை அடக்க வேண்டும்
ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
ஓதி பயன்பெற வேண்டும்
ஓய்வில் ஓய்வெடுக்க வேண்டும்
ஔடதமின்றி வாழ வேண்டும்
ஔவை சொல் பணிந்திட வேண்டும்...





































© சரவிபி ரோசிசந்திரா