10 views
தீக்குள் விரலை விட்டாள்..
இருக்கலாம் நீ
என்பதற்காகவோ எனவென்றோ...
பின் சுற்றும் சக்கரமாய்
காலங்கள் திணறின
அதிகாலையில் உன்
நினைவில் ஊர்ந்த மனம்.
ஆவல்களை இழுக்கும்
புதிரின் திமிராய்
நீ கொடுத்த தனிமை.
வெளிச்சம் நீங்கியது.
நீங்க
இருளின் அகத்தில்
குடை சாய்ந்ததோ நான்.
வந்து வந்து பார்த்தாலும்
வாசலில் ஓங்கியடிக்கும்
உன் ஞாபகங்கள்
நனைகின்றன கண்ணீரில்.
உன் திசைகள் அறியாத
மனதின் மூப்பில் நீவும்
மரண ஆசைகள்.
இந்த உயிர் நின்று
தேம்புகிறது
திண்ணையில்...
கொடியென தரையில் பரவிக்கிடக்கும்
இறந்த நாயின் சங்கிலியாய்.
சுட்டு சுட்டு சுடும் தீ
விரலில் அல்ல.
சொல்லில்...
என்பதற்காகவோ எனவென்றோ...
பின் சுற்றும் சக்கரமாய்
காலங்கள் திணறின
அதிகாலையில் உன்
நினைவில் ஊர்ந்த மனம்.
ஆவல்களை இழுக்கும்
புதிரின் திமிராய்
நீ கொடுத்த தனிமை.
வெளிச்சம் நீங்கியது.
நீங்க
இருளின் அகத்தில்
குடை சாய்ந்ததோ நான்.
வந்து வந்து பார்த்தாலும்
வாசலில் ஓங்கியடிக்கும்
உன் ஞாபகங்கள்
நனைகின்றன கண்ணீரில்.
உன் திசைகள் அறியாத
மனதின் மூப்பில் நீவும்
மரண ஆசைகள்.
இந்த உயிர் நின்று
தேம்புகிறது
திண்ணையில்...
கொடியென தரையில் பரவிக்கிடக்கும்
இறந்த நாயின் சங்கிலியாய்.
சுட்டு சுட்டு சுடும் தீ
விரலில் அல்ல.
சொல்லில்...
Related Stories
7 Likes
4
Comments
7 Likes
4
Comments