...

3 views

காட்டுப் பூக்கள்
காட்டுப் பூக்கள்
கவலைப் படுவதில்லை
களவாடிச் செல்ல
கயவர்கள் கிளம்புவதில்லை
கட்டாயக் கொய்வு வாடிக்
கிடக்கும் வரை கனவிலும்
நடப்பதில்லை.....

முரண்பட்டுக் கொள்ள
ஒரு காரணம் கூட மீதியின்றி
மரித்துப் போய் வளமான
எண்ணங்களால் உயிர்ப்பான
வரம்பெற்ற வாழ்க்கை
நிமிடங்கள்.....

ஈகோப் புயலில் சிக்காமல்
துளிர்த்த ஒரு நட்புச் சாரல்
சிலிர்த்து சுவைக்க இறைவன்
பரிசளித்த கால வரங்களில்
இதுவும் ஒன்று.......

நீயும் நானும் அவளும் இவளும்
மீட்டிய நினைவு வீணை க்குள்
பூரித்து வெளியாகும்
இசை போல இன்றைய
நினைவுகள் நாளை எனதும்
உனதும் ஞாபகக் குவியலில்
ரசித்து சுவைப்போம்......

ஒரு காலப்போராட்டத்தில்
கட்டுப் படாமல் கரைபாயும்
காட்டாறு வெள்ளம் போல
நமக்கு மட்டும் இறைவன்
பரிசளித்த சுவையான தருணமிது.....

வருடிச் செல்லும்
தென்றல் போல சற்று
இளமைக்குள் நனைந்து
வந்த நொடிகளின் தடங்கள் இதோ
பதித்து கொள்ளடி ஒரு
வரலாறு சொல்லும் வயதாகும் வரை......


இன்றைய நிகழ்வுகள்
வாசத்தால் வசீகரிக்கும்
தீர்ந்து போகத் தயாராகும்
வாசணைக் குப்பி போல
வயதாகிப் பூரிக்கும் ஒரு
தோழமை குளத்தில் சலசலக்கும்
நீரலைகளின் ஓசைகள் இதுவே....


~ சிரியஸ் ~



© siriuspoetry