...

2 views

விழாதே எழு!
விழாதே எழு!

தூக்கி எறிந்தால்
துயரில் விழாதே
மண்ணில் மறைந்து
விதையாய் எழு!

விழுந்த உடனே எழுவது கடிது
எழுந்து விட்டால்
புதுவிடியல் உனது

கலங்கி நின்றால்
கண்ணீர் தீரும்
துணிந்து நின்றால்
துயரங்கள் தூரம்

வெற்றி அடைய
வியர்வைச் சிந்து
வசந்தங்கள் வாழ்த்தும்
வாசல் வந்து

அயர்ச்சி போன்ற
அவமானம் இல்லை
முயற்சி கொண்டால்
மூலதனம் தேவையில்லை....


© சரவிபி ரோசிசந்திரா