...

11 views

என் காத்திருப்புகளுக்கு பதில் வேண்டாம்...
காலங்கள் கை கடந்து
போன பின்பும்
கால்கள் இந்த காத்திருப்புகளை
இன்னும் இறுகப்பற்றி
கொண்டுதானிருக்கிறது...

கனவுகள் காற்றோடு
கரைந்து போன பின்பும்
இந்த கற்பனைகள்
கனவுகளை
இன்னும் தொடர்ந்து
கொண்டுதானிருக்கிறது...

அடித்து பெய்த மழை
ஓய்ந்த பின்பும்
இந்த நினைவுகள்
தூவானமாய்
இன்னும் தூரிக்
கொண்டுதானிருக்கிறது...

எழுதி முடிக்கும் முன்னரே
காற்று புரட்டி போட்ட பின்பும்
இந்த எழுதுகோல்
கவிதைகளை
இன்னும் தொடர்ந்து
கொண்டுதானிருக்கிறது...

வாழ்வியல் மாறிப்போனாலென்ன
வாழ்ந்த தடயங்கள்
மாறிப் போகாதே...

நீ எனக்காக விட்டுச்
சென்ற காதலை
பற்றித் தொடரும்
இந்தக் காத்திருப்புகளுக்கு
பதில் வேண்டாம் சகியே
சிறு கவிதை கொடு போதும்
உயிர் பிழைத்துக் கொள்வான்
இந்தக் கவிஞனும்....!

© நித்திலன்...🎭