...

1 views

வாழ்க்கை வாழ்வதற்கே
நிகழ்கால கனவாக என் மனம் பிரிந்தும் அதன் பிம்பத்தை தேடுதே
கடந்த காலத்தை பிரதிபலித்த சில நாட்கள்
எதிர்காலத்திலும் அது தோன்றுமோ என்ற அச்சம். அறிந்தும் அறியாமலும் ஏதோ ஒரு தேடல்கள் தினமும்...
ஒளி இழந்த வானமாய் நான் இருக்க
வண்ணம் கொடுத்த வானவில்லாய் சில மனிதர்கள். மறைந்துவிடும் என்று தெரிந்தே யாருக்கு தான் மனம் வரும்,
அதை கலைக்க ....
முட்கள் நிறைந்த பாதை என்றாலும்
சில உணர்வுகளுக்கு செவி சாய்ப்பது ஒரு அனுபவமே. ஏமாற்றத்தால் என்னதான் மிஞ்சும், நீ கலங்கி நின்றால் உலகம் இருண்டிடுமா என்ன ....
உன் இதயத்துடிப்பிற்கு தெரியும் இது முதன்முறை இல்லை என்று....
© Apsara