...

3 views

அவள் பாத சுவடுகள்
உன் கால் கொலுசில் ஓசை ஏனோ
இசையா இதயம் யாவும் பரவி மயக்கம் செய்கிறதே,
இது என்ன மாயம், உன் பாதம் தீண்டவே இந்த மணல் மேடும் மலை தரையும் தவம் இருந்தனவோ,
கதைகள் பல படித்தும் தீரா போதை என்னுள் இருக்க உன் இரு விழியில் கொடுத்த போதையில் மூழ்கி போகிறேன்.
அழகே, என்னடி மாயம் செய்தாய் இத்தனை அழகாய் ஒருவள்,
இந்திரலோகத்தின் இளவரசி இவளோ,
கம்பன் வரைய நினைத்து தோற்று போன கவியோ,
வர்மன் தீட்ட நினைத்து, தீட்டாமல் போன ஓவியம் நீயோ,
என் சொல்லி வர்ணிப்பேன் நானும்.
உன் பாதம் மீது பார்வை இருக்கும் பொழுதில்.

© அருள்மொழி வேந்தன்