...

16 views

என்னை என்ன செய்தாயோ நீ...
உறக்கம் துறந்திருந்து
இரவுகள் பல கடந்தாச்சு...

உனக்காக காத்திருந்து
என் பொழுதுகள் விடிஞ்சாச்சு...

கவிதைகள் உன்னை பேச
என் மௌனங்கள் தீர்ந்தே போச்சு..

நான் மட்டும் வாழும் உலகில்
என் மொழியென்ன
மறந்தே போச்சு..

நகராமல் நகரும்
என் பொழுதுகள்
நரகமென்றாயாச்சு...

உன் ஒவ்வொரு வரவிற்கும் ..
சேர்த்து வைத்த
கவிதைகள் பல நூறு
தேங்கியேபோச்சு...

உன் நினைவுகள்
என்னை பாடாய் படுத்த
எனக்கு என்னையே
மறந்து போச்சு....


என்னை என்ன செய்தாயோ நீ..
விலகியே இருந்து
இன்னும் என்னை என்ன செய்வாயோ நீ....!


© sha💕jan