...

2 views

என் புன்னகை
எந்தப்புன்னகைக்கும் என்னைத்தெரியாது
ஏன் என் புன்னகைக்குக்கூட
என்னைத்தெரியாது........

ஆழமானதாக ஓர் புன்னகை
அதனை இதயத்திலிருந்து ஸ்பரிசித்து
எத்தனை காலங்களாயிற்று என்பதனைக்கூட நான்
கணக்கு வைத்துக்கொண்டதில்லை......

வலிகள் அத்தனையையும் இரகசியமாக பத்திரப்படுத்திக்கொண்டதாலோ என்னவோ இந்த புன்னகையும்
அதற்குள்ளேயே புதைந்துபோனதை உணர்ந்து கொள்ளாமலே வாழப்பழகியிருக்கிறேன்.......

எப்பொழுதாவது
கண்ணாடி முன்னே நின்று என்னை
நானே கேள்வி கேட்டுக்கொள்ளும்
பொழுது மட்டும் தோன்றும்
இன்னும் எத்தனை நாட்களுக்கு
இந்த போலியான புன்னகையை
நிஜமென நம்பி வாழ்ந்துகொண்டிருக்கப்போகிறாய்....

விடைகாண முடியாத இந்த
வாழ்க்கை
அதிலே விடை எழுத
விரும்பாத சில கேள்விகள்
இருக்கத்தானே செய்கின்றன.......

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran