...

10 views

புரியாத புதிரில்..
புரியாத புதிரில்..
வருவாயே எதிரில்..
காலைநேர கதிரில்..
சங்கீத சதிரில்..

பதறாமல் பார்க்கத்தான்..
சிதறாமல் சேர்க்கத்தான்..
அழகாக கோர்க்கத்தான்..
அதனூடே வாழத்தான்..

வாழ்வியலின் அர்த்தம்..
வல்லினத்தின் மொத்தம்..
மெல்லினத்தை சேரத்தான்..
இடையினத்தில் கூடத்தான்..

நகர்வினிலே வாழ்வும்..
படர்வினிலே வெளிச்சம்..
அலையினிலே பயணம்..
அமர்வினிலே மௌனம்..

மேகத்திலே ரதமாய்..
ராகத்திலே விதமாய்..
பாரினிலே சுகமாய்..
தேடினிலே யுகமாய்..

காணாத மழையில்..
தேயாத குடையில்..
பாயாத மடையில்..
வானவில் உடையில்..

பார்க்கின்ற பார்வை
கோர்க்கின்ற கோர்வை
தேடிவைத்த வார்த்தை
கூட்டிவைத்த வசனம்..

யாவுமெங்கோ மாயம்..
நொடியினில் சாயம்..
நாழிகையின் சாபம்..
ஓடிக்கொண்டே இருக்க..

நானும் ஏனோ..
நாழிகையில் கடிந்து..
நடந்துவர மறுத்து..
நடப்பதையும் நினைவில்..

நடந்துகொள்ள முயன்று..
நளினம்கண்டு வியந்து..
சொல்லாடல் இங்கே..
சொல்லாமல் அங்கே..

சுகம் கூட்டிப்போகும்
வரம் ஆகிப்போகும்
வரவில் எண்ணமும்
எழுத்தும் கவியிலே..

காதல் கவிதையில்..
காரிருளில் பேரொளியில்
மௌனத்திலே கீச்சல்களும்
நினைவுகளில் நிறைதலுமாய்..

© CG Kumaran