...

4 views

அன்பின் கவி ஆழ்ந்த இரங்கல் கவி
இது அன்பின் கவி
ஆழ்ந்த இரங்கல்
கவியும் கூட.....


161 ம் மலையாளப் பாட்டில் வரும் எப்போ நின் பொன் முகம் நான் காணும் என்ற வரிகள் போல

உங்களின் பொன் முகம்
புன்சிரிப்பு புது பெலன் தரும் உங்களின் தூய அன்பு
உங்களில் பற்றிப் படர்ந்திருந்த மகோன்னத மனித மாண்பு .....

இவையெல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்பதை எண்ணி வருந்தித் தவிக்கிறேன்

இனிமேல் நீங்கள் வரப் போவதில்லை......
இறப்பு இயல்பே .....
இதற்காய் வருந்தத் தேவையில்லை
இறகாய்க் கடக்க வேண்டும்
சுமையில்லாமல்
இதுவும் கடந்து போகும் என்றெண்ணி....


அதெல்லாம் தெரியாமல் இல்லை ..... தெரிந்தும் தாழவில்லை வருத்தம் ...


ஏனெனில் உங்களின் அன்பின் நிழலில் இளைப்பாறி இருக்கிறேன்


உங்களின் அன்பு கிடைத்த போதெல்லாம் அள்ளி எடுத்து ஆனந்தமாக வைத்துக் கொண்டவள் நான்....

உங்களுக்கு பெற்றோர்
இட்ட பெயரோ இளவரசன்
இன்றுவரை நிலைக்கும் பெயர் ஆபேல்.....


இயற்பெயருக்கு ஏற்றாற் போல இளவரசனாகவே...

கலகலப்போடு வாழ்ந்து மரித்தவர்.....


என்றோ ஒரு நாள் பேசினாலும்
எப்போதோ ஒருமுறை
சந்தித்தாலும்...
தீராத அன்பைப் பெறுவேன்.....

உங்களின் உயிர் பிரிந்ததறியாது
உங்களோடு பேச வேண்டும்
பேச வேண்டும் என்ற கனவோடு திரிந்திருக்கிறேன்...

திடுக்கிட்டேன் உங்களின் இழப்பு கேட்டு.....


தீராத பக்கங்களில் எழுதிச் சென்ற உங்களின் அன்பு என்னில் என்றும் நிலைத்திருக்கும்!


ஆத்திகம் நாத்திகம் என அடித்துக் கொள்ளும் உலகில் அன்பு தான் வெல்லும் என்பதற்கு இது தானே சாட்சி!

@tamilnizhal

#தமிழ்நிழல்