...

11 views

நம்பிக்கை விதைகள்...
நம்பிக்கை விதைகள்
விருட்சங்களாக வளரும் பொழுது...
நட்சத்திரங்களாக
மின்னும் பொழுது...
இதயத்தில் இனம்புரியா மகிழ்ச்சி...
மனதில் இதம் தரும் நெகிழ்ச்சி... ஆம்
மணமேடையென்றும் பாராமல் துள்ளிக்குதித்த குழந்தைத்தனம்...
அகலவிரித்த
ஆச்சர்ய விழிகள்...
இன்னும் என்
விழிகளின் முன்
விளையாடுகிறது...
சந்தித்தது சில மணித்துளிகள் தானென்றாலும்
உணர்ச்சிக்கலவை
அன்பிற்கு உரமூட்டியது...
அன்பு... ஆதரவு...
கனவு... மகிழ்ச்சி...
நெகிழ்ச்சி... கண்ணீர்...
பெருமை...சாதித்த உணர்வு எல்லாம் ஒருங்கே...
யானோர் ஆசிரியர்
பதினெண் வருடங்களுக்கு முன்
வகுப்பறையில்
நீ என்னவாகப்போகிறாய்
எனக்கேட்டேன். நான்
டாக்டராகப்போகிறேன் சார்...ஓர் கீச்சுக்குரல்
ஆர்வத்துடன்...
ஒவ்வொரு நாளும்
ஊக்கம் கொடுத்தல்...
ஆயத்தம் செய்தல்...
உலகைப்புரிய வைத்தல்... போட்டிகள் நிறைந்த உலகத்தை அறிமுகம் செய்தல்...
என பள்ளிபருவம் கழிந்தது... நானும் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு மாற்றலாகி வருடங்கள் பல கழிந்தன... அலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொழுது சின்னச்சின்ன
அறிவுரைகள்... குடும்பச் சூழல்...
நாட்கள் நகர்ந்தன...
ஓர் நாள் சார் நான்
டாக்டராகிட்டேன் எனக்
குதூகலித்தாள்... அடைந்த மகிழ்ச்சிக்கு
எல்லையில்லை...! ஓர் நாள் திருமண செய்தியை தெரிவித்தாள்... நானும்
திருமண நிகழ்வில் கலந்து கொண்டேன்... மேற்கூறிய உணர்வுகள் சங்கமித்து
நீங்காத நினைவுகளின்
அங்கமானது...
ஓர் ஆசிரியர் விதைத்த விதை விருட்சமாக வளர்ந்து நிற்கும் பொழுதும்... நம்பிக்கை
மணிகள் நட்சத்திரங்களாக மின்னும் பொழுதும்
அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... அந்த மாணவியின் வெற்றிக்கு நானும் ஓர்
ஏணியானேன் என்பது
பல விருதுகளைப்பெற்ற
உணர்வுக்கு ஆளானேன் என்பதில்
சிறிதேனும் ஐயமில்லை...

கனவுகள் நனவாக
மனதினில் உறுதி
கொள்...
கடலலையாய்
முயற்சி கொள்...
கலங்காமல்
பயிற்சி கொள்...
உன்னதமான
உலகை வெல்...🙏🙏🙏