...

8 views

கவிதைப் பெண்
எண்ணத்தில் கருக்கொண்டு
எழுத்தெனவே உருக்கொண்டு
ஏடுகளின் காகித மடியில் தவழும்
ஈடிணையில்லா ஒரு குழந்தை...

கண்ணீரின் துளிகளும் அவளைக்
காணச் செய்வதுண்டு...
கனன்று எரியும் உணர்வுகளும்
அவளுக்கு உருவம் தருவதுண்டு...
எண்ணங்கள் வண்ணம் தீட்டிக் கொள்கையில் சேயாகின்றாள்..
இயற்கையையும் எழுத்துகளில் சுமக்கையில் தாயாகின்றாள்...

கவிதை என்னும் விசித்திரப் பெண்மகள்...


© த.கிருத்திகா