...

4 views

காந்தி தாத்தா!
காந்தி தாத்தா! காந்தி தாத்தா!
சீக்கிரம் வாங்க! சீக்கிரம் வாங்க! சின்னப்பிள்ளைங்க எங்களுக்குச் சிரிக்க நேரமில்லைங்க மதிப்பெண் வாங்க மதிப்புக்கல்வியை தொலைக்கச் சொல்லுறாங்க
நீங்க வாங்கித் தந்த சுதந்திரம்
எங்களுக்குக்
கொடுக்க மறுக்கிறாங்க?
மருத்துவராகனும், ஆட்சியராகனும்
மறக்காமல் சொல்லுறாங்க
மண்வெட்டிப் பிடிச்சு
விவசாயம் காக்கச் சொல்ல
ஏனோ மறக்கிறாங்க?
தேசத்திற்காக இன்னுயிரை எய்திய அன்பு தாத்தா
பேராசைக்காக ஆருயிரை
இழக்கிறாங்க ஏன் தாத்தா?
உண்மை பேசி வாங்கித் தந்த சுதந்திரம் அன்று
வஞ்சக பொய்யால் வளரது நரி தந்திரம் இன்று
விழுமியக்கல்வி மாயச்சிறையில்
இருக்குது பாருங்க
சிறையிலிருந்து விடுவிக்க
விரைந்து வாங்க
தேசத்திற்காக சிந்திய ரத்தம் வீணாகுதே தாத்தா
மாண்புமிகு தேசத்தை காக்க
மீண்டும் பிறந்திடுங்க தாத்தா...







© சரவிபி ரோசிசந்திரா