14 views
கடந்து வந்த பாதை...
எத்தனை தூரம் சென்றாலும்
எத்தனை உயரம் சென்றாலும்
கடந்து வந்த பாதையை
எப்போதும் அசைபோட்டபடிதான்
கடந்து கொண்டிருக்கிறேன்...
ஏளனமாய் பார்த்த விழிகள்
இன்று பிரமிப்புகளில்
அகல விரிகின்றன...
எகத்தாளமாய் சிரித்த உறவுகள்
இன்று எதிர்பார்த்து
வரவேற்கின்றன...
ஏனோ என்னால் மட்டும்
அவர்களையெல்லாம்
அத்தனை எளிதில்
மறக்க முடிவதில்லை...
பசியால் வாடியவனுக்கு
பரிவுகாட்டுங்களென
உங்களிடம் வினவவில்லை...
பசியோடிருப்பவனை பரிகாசிக்காதீர்கள்
என்பதே என் வேண்டுகோள்....
ஒருவேளை பசியை துறக்க பள்ளிசெல்லும்
இவனுக்கு மத்தியில்
உனக்கென்ன குறைச்சல்
போய் படிக்க வேண்டியதுதானே
என என்னுடன்
ஒப்பிடபட்டவர்கௌல்லாம்
இன்றோ மூன்றுவேளை
பசிக்காக உப்பளத்தில்
காய்வதெல்லாம் கர்மாவே...
அடுத்தவனின் இல்லாமையை
இளக்காரமாய்
எடுத்துரைப்பவன்
தன் இயலாமையால்
இல்லாது போவதெல்லாம்
காலங்களின் கைகளில்தான்...
இன்றும் அந்த ஒட்டுப்போட்ட
கால்சட்டைகள்
பத்திரப்படுத்தியே
வைக்கப்பட்டுள்ளது
என் அறையில்...
அவைகளெல்லாம்
என் இல்லாமையை
புறந்தள்ள எனக்கு தரப்பட்ட
உத்வேகங்கள்....
கடந்து வந்த பாதைகளின்
ரணங்களை சேகரித்தே
பழகுங்கள்
கடக்கவிருக்கும் பாதைகளுக்கு
மலர்தூவிட அவைகளே
அச்சாரங்கள்....
எத்தனை கடந்தாலும்
கடந்து வந்த பாதையை
மறக்காதே...
எனக்கு நானே எப்போதும்
சொல்லிக்கொள்வது...!
© நித்திலன்...🎭
எத்தனை உயரம் சென்றாலும்
கடந்து வந்த பாதையை
எப்போதும் அசைபோட்டபடிதான்
கடந்து கொண்டிருக்கிறேன்...
ஏளனமாய் பார்த்த விழிகள்
இன்று பிரமிப்புகளில்
அகல விரிகின்றன...
எகத்தாளமாய் சிரித்த உறவுகள்
இன்று எதிர்பார்த்து
வரவேற்கின்றன...
ஏனோ என்னால் மட்டும்
அவர்களையெல்லாம்
அத்தனை எளிதில்
மறக்க முடிவதில்லை...
பசியால் வாடியவனுக்கு
பரிவுகாட்டுங்களென
உங்களிடம் வினவவில்லை...
பசியோடிருப்பவனை பரிகாசிக்காதீர்கள்
என்பதே என் வேண்டுகோள்....
ஒருவேளை பசியை துறக்க பள்ளிசெல்லும்
இவனுக்கு மத்தியில்
உனக்கென்ன குறைச்சல்
போய் படிக்க வேண்டியதுதானே
என என்னுடன்
ஒப்பிடபட்டவர்கௌல்லாம்
இன்றோ மூன்றுவேளை
பசிக்காக உப்பளத்தில்
காய்வதெல்லாம் கர்மாவே...
அடுத்தவனின் இல்லாமையை
இளக்காரமாய்
எடுத்துரைப்பவன்
தன் இயலாமையால்
இல்லாது போவதெல்லாம்
காலங்களின் கைகளில்தான்...
இன்றும் அந்த ஒட்டுப்போட்ட
கால்சட்டைகள்
பத்திரப்படுத்தியே
வைக்கப்பட்டுள்ளது
என் அறையில்...
அவைகளெல்லாம்
என் இல்லாமையை
புறந்தள்ள எனக்கு தரப்பட்ட
உத்வேகங்கள்....
கடந்து வந்த பாதைகளின்
ரணங்களை சேகரித்தே
பழகுங்கள்
கடக்கவிருக்கும் பாதைகளுக்கு
மலர்தூவிட அவைகளே
அச்சாரங்கள்....
எத்தனை கடந்தாலும்
கடந்து வந்த பாதையை
மறக்காதே...
எனக்கு நானே எப்போதும்
சொல்லிக்கொள்வது...!
© நித்திலன்...🎭
Related Stories
19 Likes
3
Comments
19 Likes
3
Comments