...

5 views

நானும் அவனும்
மறக்க முடியாத தருணங்களை நமக்கு பிடித்தவங்களால மட்டும் தான் தர முடியும். ஏதோ சில நேரங்களில நாம ஒரு தெருவில நடந்து போகும் போது இதே இந்த இடத்தில நாம அன்புக்குரியவங்களோட கதைச்சு சிரிச்ச அந்த நினைவுகள் கண்ணுக்கு முன்னால வந்து போகும் இல்லையா? அப்படி தான் இந்த பேரூந்து பயணமும் எனக்கு மிகவும் இனிய நினைவுகளை சற்றும் மறந்து விட முடியாத நினைவுகளாக இருக்கு. அந்த ஒவ்வொரு சின்னச்சின்ன பேச்சுக்கள் எல்லாமே எனக்குள்ள ஒரு திரைப்படமாக கண்ணுக்கு முன்னால வந்து போகும். நெடுந்தூர பயணங்களில நான் பேரூந்தில நுழைந்த உடனேயே கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டு எல்லாத்தையும் நினைத்து பார்த்துக் கொள்ளுவேன். இது எனக்கு வழக்கமான விடயமாகி விட்டது. நாங்க பேசிக் கொண்ட வார்த்தைகள், முதல் ஸ்பரிசம், அந்த கண்கள், சிரிப்பு, நகைச்சுவை,கோபம்,காதல் இப்படி எல்லாவற்றையும் அந்த பேரூந்து பயணம் எனக்கு மீளவும் தந்து கொண்டு தான் இருக்கிறது.....
© kavi Seelan