...

5 views

வண்ணம் கொண்ட இயற்கை
தூரிகை வர்ணனை கொண்டு வர்ணங்களின் மொழியரியா முழுங்கும் உணர்வு கலவை
செவ்வல் செழுமையோடு பரிதியோடு பக்கம் பக்கமாக தீட்டும் வான் மகன் நேமினவன்
பங்கு குறைவில்லா
ஆரலி பாங்காய் தந்திட்டாள் பாணிச்சாய் ஒளி திரண்டு நின்றாள்
திடமாய் திரளும்
மாலை பகலவன் மங்கி மருண்ட வேளையில் திமிராய் திமிரம் போல் பவனி வருகிறாள்
அர்த்தங்கள் பலவாறு பாடிக்கொண்டு
பைம்பூண் புகுந்தாள்
நல் மஞ்சலும்
கருக்கலில் கருத்தாய் பூக்களின் கவசமாய் விளங்கும் மரகத பச்சை
நிலையாய் நீண்ட பயணம் நீல வான் மகன் வண்ணம்
மாக்களிடம் உடம்பில் ஊடுருவி ஓடிக்கொண்டே இருக்கும் துலங்கள் கொண்டு துவர் ஓடும் தூய உதிரம் கொட்டும் வண்ணமும் கலவை தூரிகை தோகை விரிக்கிறாள் இயற்கை அன்னையின் மடியில் தவழும் வண்ணங்கள்
வணக்கம் 🌼🙏🏾🤍🙂
© Ash(ஈசன் )