...

8 views

என்னவளின் காதல்
நெடு நாள் காத்திருந்து அவள் வருகை
நோக்கி,
முதல் காதல் கண்ட நொடிகள் மனதில் அழைத்து கடந்த காலம் செல்ல,

அவளும் அவள் இதழும் என்னை ஆட்கொண்ட நொடி,
சிகப்பு நிற புடவை அவளும் அவள் தலையில் மலர்ந்து இருந்த மல்லிகையும்
தூரத்தில் அவள் வரவே என்னை அவளிடம் இழுத்து சென்ற அந்த மனம்..
திக்கி திணறி என் காதல் கூட
இரு விழி பெரிதாய் புன்முறுலோடு என்னை காண இங்கிருந்து வந்ததோ
அந்த வெட்கம் எனக்கு,
மறக்க மனம் தான் வருமோ,
நாழிகை களிய அவளும் வரவே

முதலில் முத்தம் பகிர்ந்து இருவரும் இதழ் ரசம் பருக
இறுக அனைத்து தீரா காதல் தீர்த்து கொள்ள,
காதலில் கரைந்து
மெல்லமாய் காமன் ஆட்கொள்ள
நாழிகை கடந்து இருவரும் அனைத்தே
உறக்கம் கொள்ள!
அவளும் கன் மூடி இறுக அவள் முகம் அருகே என்னை மறந்தேன்!
இத்தனை அழகியல் அவள் என்னை கரம் பிடிக்க போராடும் இவளும்
இவள் காதலும் பல கதைகள் கூறிய தேவதைகள் இவள் முன் மண்டி இட தான் வேண்டும்!
என் விரல் அவள் தலை கோதி கொண்டு இருக்க அறைதூக்க முனுகள் அவளின் குரலில்!

அனைத்து கொண்டு இறுக அவளின் முத்தம் என் முகத்தில்!
நித்திரையில் கூட நீங்கா இவள் !
அவள் காதல் என்னும் காவியம் என்னால் தீட்ட என்னை ஒவியனாக்கி
அவள் ஒவியமானால்!
காதலின் ஆழம் காமத்தில் மூழ்கும் நொடியில் கரைபுரண்டு ஓடும் நதியை போல் வர்ணிக்க முடியா பயணம்.

அது காதலில் திளைத்த தேவதை - ராட்சசன் மட்டுமே அறிவார்
© அருள்மொழி வேந்தன்

Related Stories