...

11 views

அந்தி மல்லி !
ஏன் இத்தனை அழகாய்
பூத்தாய்,
தேனீக்கள் மட்டும் உன்னை சுற்றி வட்டமிடவில்லை,
நானும் தான்!

அந்தி சாயும் வரை,
நீ பூக்க காத்திருந்தேன்
இருள் சூழ் முன்னே,
நீ பூத்திருந்தாய் !

கடந்து சென்ற போதெல்லாம், என்னை நீ வசியம் செய்ய மறந்ததில்லை
நானும் உன்னை ரசிக்க மறந்த,
மடையனுமில்லை !

உன் வாசம் என் தோட்டம் முழுக்க நிறைந்து இருக்கும்,
யான் பெற்ற இன்பம்,
மற்ற செடிகளும் பெறட்டுமே !

மீண்டும் ஒரு நாள்
காத்திருக்க வேண்டுமா ?
கொஞ்சம் சீக்கிரம் காட்சி அளித்தால்தான் என்ன ?

-விஜய்