...

8 views

நான் பிழை
நான் பிழை
பிழையாகவே இருந்து கொண்டிருக்கின்றேன்
ஏனோ..!

எந்தன் வாழ்நாள் முழுவதும்
பிழையாக போகின்றது..!

பிழைகளை திருத்த
அன்பென்ற
காகிதத்தில்
எழுதத் தொடங்கினேன்
பிழை
என்னுடையது
இல்லையென்று
தெரிந்து கொண்டேன்..!

எழுதும்
ஒவ்வொரு சொற்களும்
உணர்வுபூர்வமானது..!

உணர்வுகளுடன்
கலந்த காதல்
கிடைப்பது வரம்..!

எனக்குள் நீ வந்தது
உனக்குள் நான் வந்தது
இறைவன் கொடுத்த வரம்
எப்போதும் மாறாது..!

மனதார
காதலித்துக் கொண்டே
இருப்போம்..!

வாழ்நாள் முழுவதும்
எவ்வளவு பிழையாக
வாழ்க்கை
அமைந்தாலும்
அன்பென்ற நூலில்
அழகாய்
கட்டிப்போட்டு விடுவேன்..!

ஏனோ குழப்பங்கள்

ஏனோ இருக்கங்கள்

ஏனோ தயக்கங்கள்

எதை சாதிக்கப்
போகின்றோம்
என்ற கேள்விக்குறியுடன்,
ஒவ்வொரு நாளும்
தொடங்குகின்றது..!

மனதின் ஓரத்தில்
ஏதோ ஒரு விளிம்பில்
நாம் சாதனை
படைப்போம்
என்ற
நம்பிக்கையுடன்..!

எந்தன் பயணம்
அழகாய்
தொடங்குகின்றது..!

கடந்த காலமும்
எந்தன் வாழ்க்கையில்
பெரிய மாற்றத்தை
கொண்டு வந்தது..!

எந்தன்
எதிர்காலம் மட்டுமே
நிதர்சனமென்ற
உண்மையில்
வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன்..!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
என் இனியவனின்
வருகையில்
என்னை
முழுதாய் அறிந்தேன்..!

உணர்வு பூர்வமாய்
தெரிந்து கொண்டேன்..!

காதல் மட்டும் அல்ல
அன்பால்
கட்டிப் போட்டவன்..!

என்னுயிர் தந்தவன்
நீ மட்டுமே..!

என் உயிர்
இருக்கும் வரை
உந்தன் சுவாசம்
எனக்குள்
இருந்து கொண்டே
இருக்கும்
என்னுயிரே..!

ஐ லவ் யூ சோ மச் மாமா
❤️❤️❤️❤️❤️
❣️ஓர் மனதின் குரல் ❣️

© Manis✒️தனிமைகாதலன்