...

3 views

கொங்கு நாடு
தென்னை வாசம் வீச
தென்றல் மனம் வருட
பொள்ளாச்சி இளநீரும்
சிறுவாணி தண்ணீரும்
கொஞ்சும் கொங்கு தமிழின்
குறையாத குசும்பும்..

ஆழியாற்றின் வனப்பினில்
வால்பாறை வளைவினில்
மாலை பொழுதினில்
மனம் மயக்கும்
(மணமனக்கும்) தேநீரும்
சொல்லுமே
சொர்க்கம் மண்ணில் என்று..

#tamilkavithai #tamilstories #kovai #kongunadu #kongutamil #tamilwriters
© KD's WORLD