...

2 views

மரணம்
எமன் இட‌ம்
கேட்டார்கள்
எதற்கு வந்தாய் ???
என்று ...
நான்
கேட்கிறேன்
எப்போது வருவாய் ???
என்னை அழைத்துச் செல்ல ....
பயம் இல்லை
கவலை இல்லை
சிரிப்புடன்
உன்னோடு வருகிறேன் ...
நீயாவது
இறுதிவரை
ஒன்றாக இருப்பாய்
என்ற
நம்பிக்கையில்....
வேசம் மிகு‌ந்த
மனிதரிடம்
இருப்பதை விட
நரகம் ஒன்றும்
கொடுமை அல்ல....
தினமும்
சிரிப்பது போல்
நடிப்பதற்கு
இறப்பதே மேல்.....
பிறரை சிரிக்க வைக்க
நான்
இருப்பேன்...
என்
சிரிப்பை
எங்கு என்று தேடுகிறேன்.....
ஒரு நாள்
நிம்மதியாக
உறங்க வேண்டும் ....!!!
விடியல் இல்லா
உறக்கம் .....
© JS