15 views
மழையும் மரமும்
மழையும் மரமும்
*********************
எதுவோ என்னோடு
உன்னை இணைத்தது
மழை பார்த்து
மரம் கேட்டது
மழை சொன்னது
என் தேவையும்
உன் தேடலும்
நம்மை இணைத்தது
மேலே சென்றவன்
கீழே வரவேண்டும் -அதற்கு
இலைகள் மடி
தர வேண்டும்
இலையெனும் என்னுடல்
மழை நீ நனைத்திட வேண்டும்
நீ நனைந்திட
மழை நான்
மண்ணில் குதித்திட
வேண்டும்
மண்ணில் விழுந்த
உன்னை நான்
வேர்வழி அணைத்திட
வேண்டும்
நதியென நான் அலைந்தாலும்
கடலில் சென்று கலந்தாலும்
நீராவியென மறைந்தாலும்
மீண்டும் வருவேன்
உன் மடி சாய்வதற்கு
மழையாக
மறுபடி இடம் தருவேன்
உன் தலை சாய்வதற்கு
இலையாக.
ஆரூர் பூ மோகன்
*********************
எதுவோ என்னோடு
உன்னை இணைத்தது
மழை பார்த்து
மரம் கேட்டது
மழை சொன்னது
என் தேவையும்
உன் தேடலும்
நம்மை இணைத்தது
மேலே சென்றவன்
கீழே வரவேண்டும் -அதற்கு
இலைகள் மடி
தர வேண்டும்
இலையெனும் என்னுடல்
மழை நீ நனைத்திட வேண்டும்
நீ நனைந்திட
மழை நான்
மண்ணில் குதித்திட
வேண்டும்
மண்ணில் விழுந்த
உன்னை நான்
வேர்வழி அணைத்திட
வேண்டும்
நதியென நான் அலைந்தாலும்
கடலில் சென்று கலந்தாலும்
நீராவியென மறைந்தாலும்
மீண்டும் வருவேன்
உன் மடி சாய்வதற்கு
மழையாக
மறுபடி இடம் தருவேன்
உன் தலை சாய்வதற்கு
இலையாக.
ஆரூர் பூ மோகன்
Related Stories
17 Likes
0
Comments
17 Likes
0
Comments