...

4 views

எவ்வளவு விலை?
சந்தோசங்களை விற்கும்
கடைத்தெருவொன்றுக்கு
நான் போக வேண்டும்
நீங்களும் வாரீங்களா?
எனக்கு ஒரு ஆறுதலுக்காக
பல்வேறு துன்பங்களை
விற்பனை செய்யும்
அங்காடிப் பக்கம்
தவறுதலாக முட்டாள்தனமாக
நுழைந்து விட்டதாக உணர்கிறேன்....
வெளியேறும் வழிகள் கூட
இன்னும் கண்களுக்கு
புலப்படவில்லை ....
நான் இன்று என் மேல்
அனுதாபப்பட்டுக்கொள்கிறேன்.
நானும் பாவமில்லையா?
என் உதடுகள் சந்திக்கும்
சப்தங்கள் இன்னும் ஏன்
ஏழு வானங்களைக் கடக்கவில்லை
என்று யோசிக்கிறேன்...
ஒலியலைகள் வேகம் குறைந்தவை
என்பதை மறந்துவிட்டேன்.
சட்டென புரிந்து கொள்கிறேன்
இறைவனுக்கு செய்திகளை
எண்ணங்கள் மூலம்
ஒரு வலிமையான
மின்காந்த அலைகளாக
அனுப்ப வேண்டும் என்பதை...
ஒரு நடுநிசி யாகத்தில்....
பலபேரின் எண்ண அலைகள்
ஓய்வடையும் நேரத்தில்....
வாருங்கள் என்னுடன்
கைகோர்த்து கொள்ள....
சந்தோசங்களை வாங்க
நாங்கள் ஆவலுடன் காத்திருக்கும்
செய்தியை இறைவனுக்கு
அனுப்பி வைப்போம்
அதோ தெரிகிறதா?
பல ஒளியாண்டுகள்
கடந்து செல்ல வேண்டிய
அந்த சந்நிதானத்திற்கு .....

~ சிரியஸ் ~
© siriuspoetry