...

12 views

களவாடிய பொழுதுகள்



நீ என்னடா என்னை
நித்தம் தொல்லை
செய்கிறாய் நின்
குறும்புகளால்…..

எட்டி நின்றாலும்
கொல்கிறாய் அருகில்
வந்தாலும் கொல்கிறாய்
உன் காந்தப் பார்வையால்….

அதென்ன பார்வையா
எப்போதும் அலைபாயும்
உன் விழிகள் எனை
கண்டால் மட்டும்
நிலைகுத்தி நிற்பதென்ன….
அதில் தெரிவதென்ன
காதலா… தாபமா…..!!!!

உன் புன்னகை ஒன்றே
போதுமடா உணவும்
வேண்டாமென கெஞ்சுதே
இவள் நெஞ்சம்….

கட்டிலும் மெத்தையும்
தேவையில்லை ஒரு நாளும்
உன் மார்பு போதும் நான்
சாய்ந்து உறங்கிட…..
அதில் வரும் இன்பம்
வேறு எதிலும் இல்லை….

உன் கையின் வளைவிலேயே
எப்போதும் இருந்திட ஆசை….
இரும்புக் கையானாலும் எனை
அணைக்கும் பொது மட்டும்
மிருதுவாய் மாறுகிறதே…..
என் இடை நோகாமல்
தாங்கிக் கொள்ளவா …….

வீச்சருவா மீசை கண்டு
மதிமயங்கி போனேனே…
ஊர் கண்டு நடுங்கினாலும்
நான் முத்தமிட்டு ஊஞ்சல்
கட்டி ஆடுவேனே கட்டழகா….

உன் அன்பில் நனைந்த
இரவுகள் பல எனினும்…
உன் மேலுள்ள ஏக்கத்தில்
இவள் உறக்கமின்றி
தொலைத்த பொழுதுகள்
உன் அன்பை உணர்த்திய
அற்புத தருணங்கள்…..

மிதமிஞ்சிய உன் அன்பு
கண்டு நான் மயங்கிய
நேரத்தில் நீ களவாடிய
என் பொழுதுகளை திரும்பி
தருவதும் எப்போதடா…..

காத்திருக்கிறாள்
உன்னவள்… நீ களவாடிய
பொழுதுகளை திரும்பி
பெற அல்ல…. அவள்
ஆயுள் முழுவதையும்
நீ களவாடிச் செல்லவே….❤️❤️❤️❤️