...

11 views

என் எழுத்துப்பிழை அவள்
எத்தனை பேர் இருப்பினும் உன் வரிகள் என்னை ஏதோ செய்யவே,
முதலில் வரிகள் என்னை ஆட்கொள்ள
உன் அழகிய மொழியில் என்னை தொலைத்து நானும் தொலைந்து போனேன்
இது என்ன என்று அறிய மனம் இல்லை ஆனால் என் அருகில் உன் நிழல் இருக்க மனம் கொள்ளும் ஆயிரம் ஆசை...
தோன்றா காதல் பொய் தானே இது தான் நட்பு என அறிய 😍 எதும் தேவை இல்லையே
தேவை தான் வந்தாலும் தென்றல் நீ தீண்ட இதயம் இடம் மாறும் மாயம் உன்னிடம் நான் கதைக்கும் நேரம்
நிலவில் நான் நடக்க நதியில் நான் மூழ்க மனதோரம் மாயம் செய்து மலை மேல ஒரு மரம் கீழே நான் தனியே இருக்க
இருள் நடுவே ஒளியாய் நீ இருக்க
என்ன தவம் செய்தேன் இந்த
பூலோகத்தில் பிறந்து உன்னை நட்பாய் அறிய உருகியது நான் அல்லவா உன்னை உருக வைக்க நான் என்ன நெருப்பா இதழ் ஓரம் சிரிப்பில் அந்த அருவியாய் நான் கடந்து செல்ல என்னை கொண்டு உன்னை எப்படி உருக செய்வேன்!
இது போதாதா தேவதையே உன்னை கவி பாடியே என் காகிதங்கள் நிறைந்து போனால் போதுமே.
என் பேனா முனையும் உன் பெயர் தீண்டவே பல காலம் காத்திருக்க,
என் தமிழும் உன் பெயர் அழைக்க என்னை கொஞ்சி விளையாட
இது என்ன மாயம் தேவியே! புதிதாய் நான் இருக்கிறேன்

© அருள்மொழி வேந்தன்