9 views
திட்டு திட்டாய் கவிதைகள்
விளக்கொளி உன்மேல்
பசையாய் கிடந்தது.
கடல் இரைச்சல்கள் பற்றிய
உன் குறிப்புகளில்
முத்தம் குறித்த
இசை இல்லை.
ஆதியின் ஆவிகள் குறித்த
கவலையும் கொண்டாய்.
உன் பயணங்களில்
நிறைய மரணமுண்டு என்றும்
ஆறுகள் எதையும்
ப்ரதிபலிக்காது
உண்ண மட்டும் விரும்பும்
ஒரு ஓட்டத்தின் குகை
என்றும் எழுதினாய்.
நான் விளக்கை அணைக்க...
நீ இருள் மீது மோதி விழுவதை
உணர்ந்து கொண்டேன்.
ஐஸ்கட்டியின் புகையில்
காலம் நெகிழ்ந்து உன்னை
அப்புறப்படுத்த முனைந்தது.
என் கண்ணீரின்
சூட்டில் இருள் வெந்தது.
விளக்கை பொருத்திய போது
நேற்றைய இரவை நீ
கொலை புரிந்த காட்சி...
© sparisan
பசையாய் கிடந்தது.
கடல் இரைச்சல்கள் பற்றிய
உன் குறிப்புகளில்
முத்தம் குறித்த
இசை இல்லை.
ஆதியின் ஆவிகள் குறித்த
கவலையும் கொண்டாய்.
உன் பயணங்களில்
நிறைய மரணமுண்டு என்றும்
ஆறுகள் எதையும்
ப்ரதிபலிக்காது
உண்ண மட்டும் விரும்பும்
ஒரு ஓட்டத்தின் குகை
என்றும் எழுதினாய்.
நான் விளக்கை அணைக்க...
நீ இருள் மீது மோதி விழுவதை
உணர்ந்து கொண்டேன்.
ஐஸ்கட்டியின் புகையில்
காலம் நெகிழ்ந்து உன்னை
அப்புறப்படுத்த முனைந்தது.
என் கண்ணீரின்
சூட்டில் இருள் வெந்தது.
விளக்கை பொருத்திய போது
நேற்றைய இரவை நீ
கொலை புரிந்த காட்சி...
© sparisan
Related Stories
7 Likes
2
Comments
7 Likes
2
Comments