...

9 views

காதல்
கரம்போன போக்கில் ஏதேதோ கிறுக்கி,
தாள்களை கிழித்து கசங்கி தூர மூலையில் வீச,
எழுதுகிறேன் கிறுக்குதனமாக…!
உன் மேலுள்ள காதலால் தாள்களுக்கு வலிக்குமோயென்ற எண்ணத்தில் கடைசியாய் எழுதின கவிதையை ரசித்து படித்து பார்த்தப்போது உணர்வோடு என்னையே அறியாமல் சிலிர்க்க வைத்தது என் இருதயம்…!

"உணர்வுகள் என்றால் என்னவென்று கேட்பவளையே,
உன் பேச்சு திறமையாய்,
உன்னோடு பழகிய
நாட்களில் நினைவாய்,
என்னுள்ளத்தில் நிரந்தரமாய்
குடிக்கொண்டு அமர்ந்துவிட்டாயே…!
உன்னை நேரில் காணும்
நாள் தான் மிகந்தூரமோ,
நித்தமும் ஏங்கியே செல்கிறது
எனது வாழ்க்கை…!
உன் அழகிய
முகத்தரிசனத்திற்காகவும்,
உன் அன்பிற்காகவும்
காத்திருக்கிறேன்…!
விரைவில் வந்துவிடு
மன்னவா என்னோடு கரம்கோர்க்க…!"

© ER.RANJITHA DHARA