...

8 views

விடியலில்லா கனவு ❤️
விரல் நுனியில்
உலகம் இருக்கும்
இத்தகைய
காலத்திலும்
இதயம் நிறைந்த
காதலை தேடி
கற்பனையில்
ஓர் கவியாய்
நகர்த்திவிடும்
கனவுகாதலியின்
கரம் பிடித்து
உறங்கா விழிகளின்
ஒத்துழைப்போடு
பல இரவுகளை
பகலாய் கடந்திருக்கிறேன்
விடியலில்லா கனவுகளாய்..!
அர்த்தமில்லா
பல ஆசைகளின்
கூடாரமாய்
மாறிப்போன
என் மனதிற்கு
ஏமாற்றமே
விடிவெள்ளியாய்..!
கனவில் நிறைந்த
காதலும்
கானலாய் போக
மாற்றமாய் வந்தது
மணமாலை
புரிதலில்லா
புதுவகை காதல்
ஏற்றேதெல்லாம்
புதுமையாய்
விருப்பமில்லா
வாழ்வின் தேடல்
அவளின் விருப்பமாய்
வாழ தொடங்கினோம்
புதுமையாய் தெரிந்த மோகம்
போதை தெளிந்தது
பணியிழந்த காலம்
உண்மை காதல்
நானென்று நிறைந்திட்ட
சில காலம்
நான் வெறுமையென்று
உணர்த்திய பொற்காலம்..!
இழந்த பணியின்
நிறைவுதான்
என் காதலுமென்று
அன்று நானறியேன்
இருந்தும்
வாழ்ந்தே தெளிகிறேன்
என் வருங்காலத்தின்
வாரிசை நிலை நிறுத்திட..!
நினைப்பது எதுவும்
நிலையின்றி நிகழ்த்திடும்
விதிக்குதான் எத்துனை வலிமை
எனக்காய் மட்டும்
இத்தனை விருப்பமாய்
வலிகளை கொடுக்கிறது..!
இத்தனை இருந்தும்
ஓர் புத்துணர்வை
இறைவன் கொடுத்தது
ஓர் வரம்
தோழமையின்
புதுமையாய்
ஓர் தோழி
பெண் வாசம் அறியாத
எனக்கு
புது வசந்தம் தந்தவள்
என் ராட்சசி..!
கொஞ்சி பேசிடும்
நங்கையின் வசந்தமும்
கெஞ்சி மகிழ்ந்திடும்
தாய்மையின்
ஸ்பரிசமும்
ஒன்றாய் கண்டது
இவளிடம் முதல்முறை..!
எதையும்
ஓர் நொடியில்
மறந்திட செய்யும்
அவளின் வசீகர புன்னகை..!
ஏற்ற தாழ்வுகளின்
பிடிப்பில்
எதற்கும் பயணற்ற
எனை
வாழ்வியல் வசந்தத்தின்
ஓர் புதுமையை
எனக்காய் படைத்தவள்..!
அவளறியாமல்
அவளை ரசித்திட
மனதில் ஏதோ
பல நெருடல்கள்
இருந்தும் மறந்தேன்
எனையோ அவளிடம்
எதற்கொ தொலைத்தேன்
எனையும் அவளிடம்..!
அதை உணர்ந்திடா நிலையில்
ஏதேதோ தடுமாற்றம்
மறந்தும் தெளிந்திட
மறுத்தது
உரிமையில்லா உறவென்று
உள்ளத்திற்கு வேலியிட
நினைத்து எத்தனையோ
தடுமாற்றம்
அத்தனையும்
ஏனோ
அவள் பின்னே சென்றது..!
அவள் விதி
எனை மறுத்திட
என் விதி
அவளை துரத்திட
நிகழத்திட ஏதும்
வழியின்றி
தொலைவாய் ரசித்து
உயிராய் நெசிக்க
என்னிலை சென்றேனோ
நானறியேன்..!
இந்நிலை தகாதென
உள்ளம் தடுத்தாலும்
என்னுயிர் அவளிடம்
சென்றது
நானறியாமல்
நடந்ததோ
அவளுக்கென
ஓர் உலகம் அதில்
நான் மட்டுமே
உயிராய்
வாழ்ந்திட
உள்ளத்தின் தூதில்
ஊமையின் பிரதிபலிப்பு..!
எண்ணம்தான்
ஏகத்தின் சக்தி
எதையும்
இயல்பாய் மாற்றி
இன்று
எனை பைத்தியமாக்கிய
மொத்தத்தின் யுக்தி
என்னவளுக்கே
சாத்தியம்..!
கரைபுரண்டோடும்
காதலின் வெள்ளத்தில்
கரம் தங்கிடுவாளா
என் கண்ணம்மா..!
© Manis✒️தனிமைகாதலன்