...

11 views

சாத்தானின் இயற்பியல்
வழியெங்கும்
நெடுகக்கிடந்தது பாதை.

உன் தோளுரசி செல்ல
சுட்டுச்சுட்டு விழுந்தன
ஸ்வரங்களின் மத்தாப்பு.

நீ பார்ப்பதெல்லாம்
காட்சிகளின் ருசியை மட்டும்.

நம் விரல்கள் தமக்குள்
பனித்து பற்றிக்கிடந்தது
தொடுவானமாய்...

பேசிக்கொண்டு நீ நடக்க
பீத்தோவன் தவற விட்ட
குறிப்புக்கள் கிடைத்தன.

என் கனவிலும்
வீசும் காற்று உலர்கிறது...
சாத்தானின் இயற்பியலா இது?

மஞ்சளாய் குளிர்ந்த அந்தியில்
சஞ்சரிக்கும் பக்ஷிகளின்
புல்லரிக்கும் பயணங்களோ
நம் உலவலின் உணர்வுகள்?

பெயரற்ற புல்வெளியில்
கலைந்து உதிர்ந்திருந்த
உன் வாக்கியங்கள்
கோலங்களாய் சூழ்ந்தன.


© sparisan