...

17 views

கொலுசு
செல்லமாய் உனை
பின்னிருந்து
அணைக்க எண்ணி
மெல்ல மெல்ல
அடியெடுத்து
வந்தாலும்
உன்னருகில்
வந்ததும் எனக்கு
முன் நீ எனை இழுத்து
அணைக்கிறாயே
எப்படி அறிந்தாய்....
என் வருகையை
செல்லமாய் சிணுங்கும்
என் கொலுசொலி
உன்னிடம்
அறிவித்ததோ.....

என்ன தான் பைய
பைய நடந்தாலும்
உனை கண்டு
சிணுங்கும் என்
மனம் போல் அதுவும்
சந்தோஷத்தில்
கிறங்கியதோ.....

என்னதான் அணிவது
நான் என்றாலும்
நீ கொடுத்ததால்
உனக்கு தான்
உண்மையாய்
இருக்கிறது....

எனை காட்டிக்
கொடுத்துவிட்டது
உன்னிடத்தில்
சின்ன சிணுங்கலினால்....

எப்போதும்
உன்னை போல்
என் காலை
கட்டிக் கொண்டு
அழிச்சாட்டியம்
செய்கிறது...

உன் நினைவை
தூண்டி விட்டு
வேடிக்கை பார்க்கிறது...

நீ வரும் ஓசை
கேட்டு ஓடிவந்தால்
என்னுடன்
சலசலவென்று
சத்தமிட்டு
நகைக்கிறது....

உனை காணாமல்
வாடினாலும்
மென்மையாய்
ஒலி எழுப்பி
வருடுகிறது....

நீ கொடுத்த
கொலுசும் உன்
கவி பாடுகிறது....

என்ன மாயம்
செய்தாயோ...
உன் கை பட்ட
எல்லாம் உன்
அடிமையாகிறது....

அத்தனை அன்பு
செய்கிறாய்.....
உன் கை பட்ட
கொலுசே இப்படி
எனில் என் நிலமை
தான் என்ன....❤️❤️❤️

-ந.ரா. சீதாலஷ்மி