...

10 views

நதியில் கரைந்த மின்னல்
ஒரு நுரைப்பொழுதில் நீ
ஒளிந்திருந்து பார்த்தாய்.
நுரை வண்ணங்களில்
பூத்துக்குலுங்கியது
பட்டாம்பூச்சி காலங்கள்.

திரைக்கு அப்பால் சென்று
மறையுமுன் சிரித்த
கொலுசின் விண்மீன்கள்...
கால்படா ஓடைகளில்
துள்ளிடும் மின்னல்கள்.

உன் பிரக்ஞையூடே
கலையும் மேகங்கள்
களைகின்றன மழைத்துளியில்
உன் பருவங்களை.

எட்டிப்பார்க்கும் கோடை நாள்
சொல்லிக்கொள்கிறது
உன் பெயரை பனியென நம்பி.

ஆடைக்குள் பூத்த
அலையாடும் நிலவின் குளிரே
உன் நித்திலங்கள் நிலைக்குமோ
நீரின் கனமறிந்த பின்பும்...


© sparisan