...

2 views

இருண்ட தெருக்கள்
வெளிச்சம் பரவிக்கிடக்கும் தெருக்களைவிட
இருள் அப்பிக்கிடக்கும் தெருக்களிடம்
ஏராளமான கதைகள் மறைந்துபோய்க்கிடக்கின்றன.......

அந்தக்கதைகளை சொல்லிவிட விரும்பாத உதடுகளும்
அவை எதனையும் கேட்டுவிட விரும்பாத
காதுகளும்
ஒவ்வொரு விடியல்களிலும் யாரோ போல
மௌனங்களை பூசிக்கொண்டு
நடமாடித்திரிவதனை
யாருமே அறிந்திருக்கக்கூட மாட்டார்கள்.....

அந்த இருளில் மெல்லிய
ஒளியோடு வாழும்
சில சொல்லப்படாத கதைகள்
தூக்கணாங்கூட்டில் ஒட்டப்படும்
மின்மினிகளைப்போல
வெளியே தெரியப்படாமலே
மக்கிமறைந்தும் போய்விடுகின்றன......

இருண்டதெரு மீது எழுதுவதற்கு
எந்த இரசிப்புக்களும்
இல்லாமல்போகலாம் ஆனால்
அந்த இருளிடம் கேட்பதற்கு இங்கே ஏராளமான
வலிநிறைந்த கதைகள் இருக்கத்தான்
செய்கின்றன .....

#இசைவிழிசந்திரன் .
© Isaivily chanthiran