...

21 views

நண்பனாக நான்....
#poetry
வருந்தினேன்....
பார்வையற்றவனாய் உன்னை கண்டபோது,
முடவனாய் நீ நின்ற போது,
கைகளற்ற உன்னை தூக்கும் போது,
ஊமையாய் நீ பேசும் போது,
என் வார்த்தைகளைக் கேட்க முடியாதவனாய் நீ சிரித்த போது,

ஏங்கினேன்....
உன் இடத்தில் நான் இருந்திருக்கலாம் என்று,

மகிழ்ந்தேன்....
குருடனாய் நீ ஓவியம் வரைந்தபோது,
செவிடனாய் நீ பாடிய போது,
முடவனாய் நீ ஆடிய போது,
கைகள் அற்றவனாய் நீ இசைக்கும் போது,

பெருமைபட்டேன்,
நான் உன் நண்பன் என்ற போது.......