...

18 views

சீதா - ராவணா...
யாம் செய்த பிழை
உன் மீதான காதலென்றால்
யாம் செய்தது
பிழையாகவே
இருந்துவிட்டு போகட்டும்...

உன் மூச்சுக்காற்றினை
அடைந்திட நினைத்த
என் தவங்களுக்கான
வரங்களை
என் அசோகவனம்
தாங்கிக்கொள்ளட்டும்...

வேள்வித் தீயில்
உன்னை இறங்க வைக்கும்
காதல் என்னிடமில்லை
உனக்கென வேள்வித் தீயில்
உயிர் துறக்கும்
காதலே என் வசம்...

யாம் உனக்கு ராமனாக
வேண்டாம்
யாம் உனக்கு ராவணனாகவே
இருந்து கொள்கிறேன்...

நீ எனக்கில்லை
என்றானபின்
காலங்களின் கணக்குகளில்
மிஞ்சியிருப்பது
என் காதலும் கண்ணியமுமாய்
இருந்துவிட்டு போகட்டும்...!

© நித்திலன்...🎭