...

23 views

பெண்மை மலரும் தருணம்
ஆயிரம் முத்தங்கள்
வேண்டியே உன் முகம்
பார்த்து காத்திருக்கிறேன்…

உன் வருகை பார்த்து
வழிமேல் விழிவைத்து
காத்து நிற்கிறேன்….

நீயோ வந்தகதும்
உடை மாற்றுகிறாய்
அன்று நடந்த நிகழ்வுகள்
விடாமல் விளக்குகிறாய்…..

சென்ற இடங்கள் முதல்
கொண்டு அனைத்தும்
பற்றி சொல்கிறாய்…

அவ்வப்போது என் முகம்
பார்த்து சொல்கிறாய்….
அப்போதும் என் தவிப்பு
உனக்கு புரிவதில்லை…

ஆயிரம் வேண்டாமடா
ஒன்று மட்டுமாவது
கொடு என என் மனம்
வேண்டுகிறது….
உன் அணைப்பிற்கு
ஏங்கி தவிக்கிறது…..
கண்கள் இறைஞ்சுகிறது…..

என் மனம் அறிந்தும்
தெரியாதது போல்
நடிக்கிறாயா?
என் கள்வனே....
உன் முகம் ஒன்றும்
அறிய முடியவில்லையே…..

எப்போதும் உன் சிறு
பிரிவுக்குப்பின்னும்
உன்னை காணும் போதெல்லாம்
உன்னை கட்டியணைத்து
முத்தம் தந்து என் பிரிவை
உணர்த்தவே ஆவல் கொள்வேன்…..
ஆனாலும் ஒரு போதும்
அதை நான் செய்ததில்லை…

என்னை பார்த்ததும் எப்போதும்
போல் உரையாடும் உன்
வார்த்தையில் என்
தாபத்தை தொலைத்து
என் எண்ணத்தை கை
விடுகிறேன் பெண்ணிவள்…..

ஆனால் இன்று ஏனோ
மனம் அடங்க மறுக்கிறது….
உன் பேச்சில் எனக்கு
நாட்டமில்லை
எனினும் தலையாட்டி
கேட்கிறேன்…
அதை நீயும் உணர்வாய்
என்றே நினைக்கிறேன்….

தேநீர் கேட்க எடுத்து வர
உள்ளெ செல்ல யத்தனிக்க
அப்பொது சட்டென்று என்
வளைக்கரம்  பிடித்து
எனை அள்ளி எடுத்து
திரண்ட உன் மார்போடு
இருக்கியணைத்து
நெற்றியில் ஒரு முத்தமிட்டு
என்னை பார்த்து குறும்பாய்
சிரித்த நொடியில்
உணர்த்தேன்….
உன் காதலை…

என் பெண்மை மலர்ந்து
பூத்துக்குலுங்கியதடா….
பூக்கள் பூக்கும் தருணம்
யாரும் அறிவதில்லையாம்….
ஒவ்வொரு பெண்ணும்
அவள் உள்ளுக்குள் மலரும்
தருணம் அவளவன்
அவள் அன்பை உணர்ந்து
நடக்கும் தருணமே….❤️❤️❤️❤️