...

4 views

கொலுசு சத்தம்
தினமும் யோசிக்கிறேன்,
நித்தம் நீ கனவில் வரவே,
யாசிக்கிறேன் கனவு யாவும் நிஜத்தில் நிலைத்திடவே,
பூ பாதம் தரை தொடும் நேரம்,
சுற்றி சத்தம் இல்லா புயலும் வீச,
இதழ் சிரிப்பில் நீ வரவே,
இதயம் ஏனோ உன் வசம் வரவே,
பூலோகம் தீண்டிய உன் பாதமும்,
வான்லோகம் சுற்றிய மேகமும்,
ஒன்றோ காற்றில் நான் வரைந்த ஓவியம் நிஜத்தில் நீயாக,
உன் பாதம் தீண்டும் வரம் ஒன்று வேண்டும்,
சேமித்த காதலில் நான் செய்த கொலுசுகள் உன் பாதம் சரண் அடையவே வரம் கேட்டதோ,
தீரா காதலில் தீர்ந்து போன நானும்
தீந்திரியாய் மாறிய நொடியில்,
எழுதிய வரிகள் இங்கே.
கவியே கண்கள் நீ சிமிட்ட,
என்னை கடந்து செல்ல,
குரல் ஒன்று கேட்க,
கால் கொலுசுகள் தாளமிட,
ஆனாந்த தாண்டவம் தொடர்கிறதே,
முடியா காதலின் முதல் முற்றம் இதுவோ
© அருள்மொழி வேந்தன்