...

22 views

பள்ளி நினைவுகள்
@karthikrosepoetry
© All Rights Reserved

நான் படித்த பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்டது. என் தோழர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து நட்டு வைத்த மரங்கன்றுகள் வளர்ந்திருந்தன.

அந்த மரங்களில் ஒன்று மட்டும் என்னை அதன் அருகில் ஈர்த்தது ஏன்னென்றால் அந்த மரம் நானும் என்னுடன் படித்த தோழியுடன் நட்டு வைத்த மரம்.

அந்ந மரத்தை தொட்டுப் பார்த்து அதனருகில் சிறிது நேரம் அமர்ந்தேன். அங்கு வீசிய காற்று மனதை வருடியது அதில் மனம் நெகிழ்ந்து என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது.

என் நண்பர்கள் அனைவரும் என்னுடன் இருப்பது போல் உணர்ந்தேன். யார் சொன்னது அவர்கள் என்னை விட்டு
பிரிந்து சென்று விட்டார்கள் என்று..

அவர்கள் தந்து சென்ற நட்பு மூச்சுக்காற்று போல் எங்கும் பரவியுள்ளது. அவர்களை சுவாசித்து நேசித்து அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
அவர்களுடன் சேர்ந்து பயணித்துக் கொண்டேதான் இருக்கிறேன்..


#tamil #tamilquotes #பள்ளி_நினைவுகள்