...

14 views

நான் நானாக இருப்பதால்......
எங்களோட ஒரு செயல் இன்னொருத்தங்களை சந்தோசப்படுத்துற அந்த தருணம் அதை வார்த்தையால சொல்ல முடியாத அந்த நிலை அது ஒரு பிரமிப்பான மனநிலை. இது எல்லாருக்கும் ஏதோ ஒரு தருணத்தில அனுபவிக்கிற வாய்ப்பு கிடைக்கும் கிடைச்சும் இருக்கும்.
எங்கள சந்தோசப்படுத்துற விசயங்களை நாம பார்த்து பார்த்து செய்து கொள்ளலாம்.
ஆனா இன்னொருத்தங்கள சந்தோசபட வைக்கிறது கொஞ்சம் கடினம்.அவங்க மனநிலை பற்றி எல்லாம் கட்டாயம் யோசிக்கணும். இதில நாங்க நம்ம சுயத்தையும் இழந்திட கூடாது.
வழமையான செயற்பாடுகளில யாருக்கும் பெரிசா சந்தோசம் கிடைக்காது.நமக்கு எது எல்லாம் அந்த குறித்த நேரத்தில அருந்தலாய் இருக்கிறதோ அது தான் நம்ம சந்தோசமாய் இருக்கும். அது ஒரு பொருளாகவோ,ஒரு நபராயோ, ஒரு பாடலாயோ, சில வார்த்தையாக கூட இருக்கலாம். . சிலர் இதை பெரும்பாலும் வெளிப்படுத்துவாங்க ஆனாலும் சிலர் மௌனமா இரசித்து கொள்வாங்க. அதெல்லாம் அந்தந்த நேரத்து மனநிலையில தான் தங்கி இருக்கும். இன்னொருத்தர்ட சந்தோசத்தில சந்தோசப்படுற உணர்வு என்னை நானாகவே உணர்விக்கிறது.....

© kavi kavya