...

20 views

மழையும் அவளும்...
என் வாழ்வில்
மழையும் அவளும்
ஒன்றே...

வான் பார்த்து
விரிந்து கிடக்கும்
பூமிக்கு
வரப்பிரசாதம்
மழையெனில்
கவிதை பார்த்து
படர்ந்து கிடக்கும்
என் காதலுக்கு
வரப்பிரசாதம்
அவள்...

மழையோ வையகம்
செழிக்க வைக்கிறது
அவளோ என்னகம்
செழிக்க செய்கிறாள்...

மழைக்கு முன்பான
மண்வாசம்
எனக்கோ அவள்
வாசமாகிறது...

மழை அவளாகி
போகையில்
கையில் குடையிருந்தும்
நனைந்திடும்
காதல் கோமாளி
நானாகிறேன்....!

© நித்திலன்...🎭