...

12 views

கத்தி என்பதன் மிச்ச விரல்கள்
எழுதவும் சில சமயம்
பலி கேட்கிறது மனம்.

உயிர்கள் அன்றி வேறு...
தின்பண்டம் திரவம்
பொருள் அன்றி வேறு.

நிழல்களை பிசைந்து
சிலை செய்து
உணர்வுகளை நிறங்களாக்கி
சாந்து பூசிய பின்...

இலைகளை மறைக்கும்
இலைகளில் ரஸமெடுத்து
அச்சிலையில் நிரப்பினேன்.

கவிதைகள் ருசி கூடி
தொடுவானத்தில் பறவையாக
தன்னையிழந்து
மிதந்தன மெஸ்மருடன்.
பாடம் செய்யப்பட்ட
அக்கனவில்...

ஒரு தட்டான்பூச்சியின்
கண்ணாடிச்சிறகிலிருந்து
உதிர்ந்த சொற்கொண்டு
ஒரு வலை செய்து வீசியதில்
கிடைத்தது இக்கவிதை...

பாதியாய் இருக்கும்
இக்கவிதையின் மீதி
ஒரு ஒற்றனின்
சவரக்கத்தி வைக்கும் பையில்
இருப்பதாய் கேள்வி...

© sparisan