13 views
மனித நேயம்
மனிதநேயம்
நண்பர்களை உறவினர்களை நேரில் சென்று சந்திக்க தவிர்த்தோம் சந்திக்க முடியாது போனபின் ஏனென்று சிந்திக்கிறோம்
.
அருகில் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு வலைத்தளங்களில் வலைவீசி வலம் வருகிறோம் ச.
சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கிறோம்
சமூகத்தில் சமுத்திரம் போல் சவால்களுடன் வாழ்கிறோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு உதவ மறந்தோம் சமூக இடைவெளியின் சந்திப்பில் பயணிக்கிறோம்
பண்டைய கலாச்சாரத்தை மறந்து பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்து மேல்நாட்டு உணவு முறையில் சுவை கண்டோம் வராத நோய்களுக்கு விருந்தாளி ஆனோம்
முன்னோர்கள் தாய் தந்தையர் அறிவுரைகளை அலட்சியம் செய்தோம் தான்தோன்றித்தனமாக வளர்ந்து சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்
சுற்றுப்புறச் சூழலை அலட்சியம் செய்து நச்சுத்தன்மையை பெருக்கி நாம் சுவாசிக்கும் சுவாசக் காற்றை மாசு படுத்தினோம்
ஐம்புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்ற தத்துவத்தை மறந்து இப்பொழுது முகக்கவசம் கையுறை அணிந்து திரிகிறோம்
இயற்கை சூழலில் ஈடுபாடு இல்லாமல் விஞ்ஞான வளர்ச்சியில் விரைந்து சென்றோம் விஞ்ஞானம் மறந்த நிலை துறந்தோம்
கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்று அறிய ஆர்வம் கொண்டோம் நம்மைச் சுற்றி நிலவும் கிருமி என்ன என்று அறிய மறந்தோம்
திருவிழா பண்டிகை திருமணம் மற்றும் இதர சடங்குகள் செய்ய முடியாமல் கட்டுண்டு தனிமையில் வாழ்கிறோம்
இதற்கெல்லாம் எப்பொழுது விடிவுகாலம் சிந்தித்து செயல்படு
நோய்கள் வராமல் தவிர்த்திடு
மனிதநேயம் போற்றி வாழ்ந்திடு
© KaviSnehidan
#KaviSnehidan
#KaviSnehidan
நண்பர்களை உறவினர்களை நேரில் சென்று சந்திக்க தவிர்த்தோம் சந்திக்க முடியாது போனபின் ஏனென்று சிந்திக்கிறோம்
.
அருகில் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு வலைத்தளங்களில் வலைவீசி வலம் வருகிறோம் ச.
சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவிக்கிறோம்
சமூகத்தில் சமுத்திரம் போல் சவால்களுடன் வாழ்கிறோம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு உதவ மறந்தோம் சமூக இடைவெளியின் சந்திப்பில் பயணிக்கிறோம்
பண்டைய கலாச்சாரத்தை மறந்து பாரம்பரிய உணவு முறைகளைத் தவிர்த்து மேல்நாட்டு உணவு முறையில் சுவை கண்டோம் வராத நோய்களுக்கு விருந்தாளி ஆனோம்
முன்னோர்கள் தாய் தந்தையர் அறிவுரைகளை அலட்சியம் செய்தோம் தான்தோன்றித்தனமாக வளர்ந்து சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்
சுற்றுப்புறச் சூழலை அலட்சியம் செய்து நச்சுத்தன்மையை பெருக்கி நாம் சுவாசிக்கும் சுவாசக் காற்றை மாசு படுத்தினோம்
ஐம்புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்ற தத்துவத்தை மறந்து இப்பொழுது முகக்கவசம் கையுறை அணிந்து திரிகிறோம்
இயற்கை சூழலில் ஈடுபாடு இல்லாமல் விஞ்ஞான வளர்ச்சியில் விரைந்து சென்றோம் விஞ்ஞானம் மறந்த நிலை துறந்தோம்
கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்று அறிய ஆர்வம் கொண்டோம் நம்மைச் சுற்றி நிலவும் கிருமி என்ன என்று அறிய மறந்தோம்
திருவிழா பண்டிகை திருமணம் மற்றும் இதர சடங்குகள் செய்ய முடியாமல் கட்டுண்டு தனிமையில் வாழ்கிறோம்
இதற்கெல்லாம் எப்பொழுது விடிவுகாலம் சிந்தித்து செயல்படு
நோய்கள் வராமல் தவிர்த்திடு
மனிதநேயம் போற்றி வாழ்ந்திடு
© KaviSnehidan
#KaviSnehidan
#KaviSnehidan
Related Stories
32 Likes
1
Comments
32 Likes
1
Comments