...

8 views

நகரம்
காடுகள் வழுக்கி
விழுந்த நகரத்தில்

அலைகிறேன்...
பாம்புகள் தேடி.

மரங்கள் இருந்த நிலத்தில்
தெருக்கள் முளைத்து
இலை
உதிராத பாதைகள்.

எதையோ தேடி
சுவர்களை நக்கி விட்டு
ஓடி ஒளியும் நாய்கள்.

இங்கே யானைகள்
அலைந்திருக்கும்
என்ற கனவில்..

காடு தொலைத்த
பாம்புகள் தேடுகிறேன்.

நகரம் உன்னை
பிராண்டியபடி இருக்க...

உன் பிள்ளையின்
ஓவியமெல்லாம்

நீ தொலைந்த காடுகளும்
விஷமான உன் சிறுநீரும்.

நகரத்தின் கோரப்பார்வை
உன்னோடு விழுங்குகிறது
உன் பின்னே
வருபவனை.

© sparisan