...

8 views

நிதர்சனமான உண்மை
சில நாட்கள்...
எல்லோரும் கோவிலுக்குள் போவது சில பதிலில்லா
கேள்விக்கு பதில் தேடி தான்...
கடவுளிடம் கோபம் கொண்டேன்
சாதி , மதம் படைத்த நீ ஏன் காதலையோ அல்லது
காதலை படைத்த நீ ஏன் சாதி மதத்தையோ படைத்தாய் ?
சாதியா?மதமா?அப்படி என்றால் என்ன என்று என்னிடமே திருப்பி கேட்டார்?
கண் விழித்து பார்த்தேன் கடவுளும் இல்லை...
நானும் கோவிலில் இல்லை...
சன்னல் வழியே பார்த்தேன்
வீதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்
சாதி மதத்தை படைத்த
மனிதக்கடவுள்கள்....