...

10 views

கோபங்களில் நீ மார்கழி
உன்
எல்லாக்கோபங்களிலும்
இல்லை இக்கோபம்.
சிரித்துக்கொண்டேன்.

ஓரிரு நாட்கள் பேசமாட்டாய்
தெரியும்.
உனக்கும் அது
உறைந்துபோன ஓரிரு வருடமோ?

எழுதும்போது மறந்த
கவிதையின் ஓரிரு வரி
கனவில் தெரிந்தது போல...

நாட்களின் முடிவுகளில்
ஒய்வற்ற நாய்குட்டியாய்
உன் வேதனைகளை
தோழியிடம் தமிழில்
சிந்திக்கொண்டிருப்பாய்.

முத்தமிட்ட கணங்கள்
நொடிக்கொருமுறை
நினைவு வர.

என் தொலைபேசியெங்கும்
அழியாத உன் ரேகைகளில்
காய்கின்ற கண்ணீரை
பார்த்தபடி நான்.

© sparisan