...

11 views

அப்பா....
விடியலில்லா
இருளின் ஒளியில்
விடிவெள்ளியாய்
சில நினைவுகள்.!

எனை அன்போடு பற்றி
நான் உணர்ந்ததில்லை..!

எனை சில நொடிகள் கூட
அணைத்ததில்லை..!

என் கரம் பிடித்து
நடக்க பழக்கவுமில்லை..!

தானாய் நடக்க
கற்று கொடுத்தாய்..!

அது எனக்கு நானே என்று
உணர்த்திடதானோ..!

எப்போதும்
கடுமையாய்
இருந்தாலும்
நின் மனதின்
ஈரம் நானறிவேனய்யா..!

உதட்டில்
கடிந்து கொண்டாலும்
உள்ளத்தில்
உள்ள பாசம்
நானறிவேனய்யா..!

சிறுது காலமே
உடனிருந்தாய்
என் சிறுவயதே
நின் இறுதியானதேனோ..!

சில காலம்
வாழ்ந்திருந்தால்
எனை
சிகரம் தொட
வைத்திருப்பாய்..!

எமனுக்கென்ன
அவசரமோ
உனை
அருகாமையில்
பெற்றுக்கொண்டான்..!

எனை
அனாதையாய்
விட்டுவிட்டான்..!

அப்பா
உனை மறவா
மழலையாகவே
நானும்
மடிந்திருக்கலாம்..!

வலிகளுக்கு
ஓர் இடம்
வேண்டுமென்று
எனை பெற்று
விட்டுவிட்டாயோ..!

காலத்தை
கடிந்து கொண்டாலும்
நீதர்சனம்தான்
நீயறிவாயோ..!

வசந்தங்கள்
ஏதுமின்றி போனாலும்
வலிகளுக்கு
விடுதலையின்றி
வசப்புகளுக்கு நடுவே
நெருப்பில் சிக்கிய
மின்மினியாய் நான்..!

அப்பா..!
© Manis✒️தனிமைகாதலன்