...

7 views

திறவுகோல்

பிறந்தது முதல் இப்ப வரை நிறைய வருடங்கள் கடந்து வந்தாச்சு. ஆனாலும் இந்த வருடங்கள் எங்களுக்கு என்னலாம் நல்ல விடயங்களை தந்திச்சு என்னலாம் அதிகம் நல்லதில்லாம நடந்திச்சுனு பலரும் யோசிச்சு பாக்கிறது வழமை தான். இந்த யோசனைகளில நாம ரொம்பவும் கெட்டதை மட்டும் தான் எடுத்து கொண்டு யோசனை பண்ணுவம். நல்லதை எடுத்து அந்த தருணங்களை நினைச்சு பார்க்க மறந்து போயிடுறம். எங்களோட அந்த இனிப்பான தருணங்கள் இதே போல கிடைக்குமா கிடைக்காத என்ற பயம் வழமையாய் இருக்கிறது தான், ஆனாலும் இந்த பயத்தை எல்லாம் தூக்கி வீசிட்டு இந்த நிமிடத்துக்கான சந்தோசம் எதில கிடைக்குதோ அதை இறுக்கமாய் பிடிச்சுக் கொள்ளுங்க. நாளை என்றத நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம். இந்த நிமிடங்களை பயத்தினாலையும் எதிர்மறையான எண்ணங்களாலையும் தொலைச்சிராதிங்க. எல்லோருமே கூட எதிரான மனநிலைமையில தான் எல்லாரும் இருப்பிங்க நானும் கூட. எல்லாத்தையும் விட்டு வெளியில வாங்க. இந்த பிரபஞ்சத்தை நம்புங்க. நமக்கானதில நாம வைச்சிருக்கிற நம்பிக்கை தான் இந்த முழுமையான வாழ்க்கை.
வாழ்வியலிலை எதை எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு போகிறோம் என்றது ரொம்பவே முக்கியம் இல்லையா? எப்பவுமே சோர்ந்து போயிடாமல் மனதைரியத்தை எடுத்து கொள்ளுங்க. போராட்டம் இல்லாத எந்த வாழ்க்கையும் சுவாரசியத்தை தராது. போராடி ஒன்றை நாம எடுத்துக் கொள்ளுற போல சந்தோசம் எதில கிடைக்கும்!......



© kavi Seelan